பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

Estimated read time 1 min read

ஜம்மு-காஷ்மீரில் ரம்யமான பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.

இந்த பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் சீறிப்பாய்ந்து சென்றது. பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டது. ஆனால், வந்தே பாரத் ரயில் மட்டும் தடையின்றி இயங்கி பயணிகளுக்கு பேருதவியாக இருந்தது. இதுதொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

You May Also Like

More From Author