இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

Estimated read time 1 min read

தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக அரசுடன் தேவையற்ற அரசியல் மோதல்களைத் தவிர்த்து, இணக்கமான சூழலைக் கடைப்பிடிக்க முதலமைச்சர் விஜய் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்களை முழுமையாகப் பெறுவதே அவரது முதன்மை நோக்கமாக உள்ளதாகவும் தெரிகிறது.

மத்திய அரசை நேரடியாக எதிர்க்கும் சூழலைத் தவிர்க்கவே, தவெக-வுக்குக் கிடைத்த முதல் மாநிலங்களவை எம்பி பதவியை காங்கிரசுக்கு விஜய் வழங்கியதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், தமிழகத்தில் தவெக அமைத்துள்ள கூட்டணிக்கு புதிய பெயர் ஒன்றை வைத்து, கூட்டணியை மேலும் வலுப்படுத்த அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author