இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு விரிவான மூலோபாயக் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி மலேசியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
இது இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் மலேசியப் பயணம்: இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை வலுப்பெறுமா?
