இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
தொடர்ச்சியான எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த ராணுவ பதட்டங்களை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.
புதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.