அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சரண்டைந்தால் அரசிடம் இருந்து உ தவிகள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இடதுசாரி பயங்கரவாதம் என்பது ஒரு சித்தாந்தத்தால் இயக்கப்படும் சவால் என்றார்.
கம்யூனிச சித்தாந்தம் வளர்ச்சியை தடுக்கிறது என்றும், அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று அமித் ஷா, கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டுவர முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், கேரளாவில் மட்டும் ஜனநாயக அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் ஓரளவுக்கு இருப்பதாகவும் இருப்பினும் மக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து மாற்றத்தை தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.
