உங்களுக்கு 15 நாள் தான் டைம்… ஈரானுக்கு கெடு விதித்தார் டிரம்ப்

Estimated read time 1 min read

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் முதல்முறையாக பதவி ஏற்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.’இந்த ஒப்பந்தத்தால் எந்த பயனும் இல்லை’ என, அறிவித்ததுடன், ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்தார்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டிரம்ப், ஈரானுடன் மீண்டும் கூடுதல் நிபந்தனைகளுடன் கூடிய அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள முயன்று வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில், காசா அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற டிரம்ப், ஈரான் குறித்து பேசியதாவது: ஈரான் அணுசக்தி திட்டம் கு றித்த பேச்சு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இதை ஈரான் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமெனில், இதற்கான ஒப்பந்தத்தை விரைந்து எட்ட வேண்டியது அவசியம். இல்லையென்றால், மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.

கடந்தாண்டு ஜூனில் நடத்தப்பட்ட அமெரிக்க வான் வழி தாக்குதலில், ஈரானின் அணு சக்தி திறன் அழிக்கப்பட்டுவிட்டது. இதை ஒரு படி மேலே கொண்டு செல்வதும், செல்லாமல் இருப்பதும் ஈரான் முடிவை பொறுத்தது. அடுத்த 10 நாட்களில் இது பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அணு சக்தி ஒப்பந்தத்தை எட்ட 10 முதல் 15 நாட்கள் போதுமான அவகாசம். இதுவே அதிகபட்சம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author