சிவகங்கை மாவட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள சாம்பிராணி கருப்பர் கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 12ம் தேதி மாசி விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான அரிவாள் மீது சுவாமி ஏறி சாமியாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் விரதமிருந்து குடும்பத்துடன் வந்து பச்சைவாழை பரப்பியும், கரும்புத் தொட்டில் கட்டியும், அரிவாள் சமர்ப்பித்தும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
