கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!

Estimated read time 1 min read

பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை அயோத்திபட்டியை சேர்ந்த சிலர், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பு பட்டயத்தை படித்து விளக்குமாறு பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தியிடம் வழங்கினர்.

அதனை ஆய்வு செய்த அவர், ராமநாதபுர சமஸ்தானத்தின் முதலாம் முத்துராமலிங்க சேதுபதியும் திருமலைநாயக்கரும் இணைந்து அக்குசால் முருகக் குடும்பன் என்பவருக்கு செப்பேட்டை வழங்கியது தெரியவந்தது.

முத்துராமலிங்க சேதுபதியின் நோயை தீர்க்க உதவியதால் 12 லட்சம் பொற்காசுகளை

வழங்குமாறு திருமலைநாயக்கருக்கு அவர் உத்தரவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author