அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல் நாளிலேயே 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 4 நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
சிங்கப்பூர் பயணத்தின் போது, உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்வது தொடர்பாக பல பன்னாட்டு நிறுவனங்களுடன் அவர் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
இதையடுத்து ஜப்பான் சென்ற அவர், அந்நாட்டின் பிரபல நிறுவனங்களின் உயரதிகாரிகள், நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின், அங்குள்ள நிறுவனங்களுடன் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
