விரிவாக்கத்துடன் பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய பங்கு

16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை, ரஷியாவில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்புக்கிணங்க இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிக்ஸ் விரிவாக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதலாவது உச்சிமாநாடு இதுவாகும். தாய்லாந்து, கியூபா, சிரியா, பெலாரஸ் முதலிய 30க்கும் மேலான நாடுகள் பிரிக்ஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.


பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை, வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் கோரிக்கைக்குப் பொருந்தியது. பிரிக்ஸ் நாடுகள் எப்போதும் பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையில் ஊன்றி நின்று வருகின்றன.

உலகளாவிய தொழில் சங்கிலி மற்றும் வினியோக சங்கிலியின் நிலைப்புத்தன்மை மற்றும் சுமுகமான நிலையைப் பேணிக்காப்பதிலும் அனைவரையும் உள்ளடங்கிய பொருளாதார உலகமயமாக்கத்தை ஊக்குவிப்பதிலும் பிரிக்ஸ் நாடுகள் பங்காற்றி வருகின்றன.


எதிர்காலத்தில், மேலதிகமான நாடுகள் இவ்வமைப்பில் சேர விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதோடு , பிரிக்ஸ் அமைப்பு, சர்வதேச விவகாரங்களில் மேலும் ஆக்கப்பூர்வமான, நிதானமான மற்றும் நேர்மறையான பங்காற்றும். இதன் பல்துருவம் மற்றும் பலதரப்புவாதத்தை உலகம் பேணிக்காக்கும் ஆற்றல் தொடர்ந்து வலுவாகும். இவ்வமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சீனா, இந்த ஒத்துழைப்பு அமைப்புக்கு உறுதியான ஆதரவாளராகவும் பங்கேற்பாளராகவும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author