நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் ஆக்ரோஷமான எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் காரணமாக, இந்த கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களும் அரசியல் மோதல்களும் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
மகளிர் இடஒதுக்கீடு உள்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
