ஈரான் உடனான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக வெளியேற அமெரிக்க வெளியுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது.
பிப்ரவரி 27, 2026 அன்று ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தலில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன:
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இஸ்ரேலை விட்டு வெளியேறலாம்.
அமெரிக்க அதிகாரிகள் பழைய ஜெருசலேம் நகரம், மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியான விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும்போதே, அமெரிக்கக் குடிமக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற அனுமதி: ஈரானைத் தாக்கத் தயாராகிறதா?
