மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 7 புதிய கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளங்களை (ADTT) அமைத்துள்ளது.
கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் இந்த அதிநவீன மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதிலும் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 7 புதிய தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைத்த மாருதி சுஸூகி
