உலகின் மிகப்பெரிய ஸ்டேபிள்காயின் நிறுவனமான டெதர், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சுமார் 4.2 பில்லியன் டாலர் (சுமார் 35,000 கோடி ரூபாய்) மதிப்பிலான தனது கிரிப்டோ டோக்கன்களை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்த முடக்கம் அதிக அளவில் நடந்துள்ளது.
கிரிப்டோ சந்தையில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எல் சால்வடாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ டோக்கன்கள்
