பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைப் பதற்றம் தற்பொழுது ஒரு புதிய போர் சூழலாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் கோரசன் (ISIS-K) பயங்கரவாத அமைப்பின் முகாம்களைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் ட்ரோன் மூலமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா ஆகிய மாகாணங்களில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ட்ரோன் தாக்குதல்; ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் அழிப்பு
