எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற தொழிலாளர் சார்ந்த தொழில்களை மையமாக கொண்டு, வர்த்தக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஒதுக்கீட்டில் 20% அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
“குழாய் வழி எரிவாயுவை மாற்றாகப் பயன்படுத்த முடியாத தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,” என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
இந்த அறிவிப்பின் மூலம், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் ஆரம்பத்தில் செய்யப்பட்ட குறைப்புகளுக்குப் பிறகு, மொத்த வர்த்தக LPG ஒதுக்கீடு தற்போது நெருக்கடிக்கு முந்தைய அளவுகளில் 70% ஆக உள்ளது.
மாநிலங்களுக்கான வர்த்தக எல்பிஜி ஒதுக்கீட்டை 70% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு
