நாசா தனது ஆர்டெமிஸ் II திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
இதன் மூலம், அரை நூற்றாண்டுக்கு பிறகு நிலவிற்கு மனிதர்கள் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை மாலை புறப்பட்டது.
நாசா தளபதி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் குளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் திட்ட நிபுணர் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் ஆர்டெமிஸ் II விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது
