நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை; அண்ணாமலை..!!

Estimated read time 0 min read

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை,

தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதை பாஜக தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மற்றும் நிதின் நபின் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே கூறி விட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடமும் இதனை தெரிவித்தேன் என்றும், எனவே தலைமைக்கு சென்ற வேட்பாளர் சிபாரிசு பட்டியலில் என் பெயர் இல்லை என்றும் அவர் கூறினார்.

என்னுடைய கோரிக்கையை கட்சி ஏற்றுக்கொண்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது மகிழ்ச்சி தான் என்றும், எனவே என்டிஏ கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பரப்புரை செய்வேன் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author