அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஈரான் வழங்கிய 10 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்த ராஜதந்திர நகர்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.News18 செய்தியின்படி, புதிய போர்நிறுத்தக் கட்டமைப்பின் கீழ், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து ஈரான் 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்கும்.
ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
