அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக “தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போர் நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புவதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
“நாங்கள் முன்னரே தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, தற்போதைய மோதலுக்கு விரைவில் ஒரு முடிவைக் கொண்டுவர, பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவை அவசியமானவை,” என வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா; ‘தடையற்ற’ கப்பல் போக்குவரத்திற்கு அழைப்பு
