“தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது”- எஸ்.ஏ.சந்திரசேகர்

Estimated read time 1 min read

விஜய்யின் வீட்டில் அவரது தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் விசில் அடித்தும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தை சந்திரசேகர், “நிச்சயமாக, விஜய் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். விஜய்க்கு கிடைத்த வெற்றியால் ஒரு தந்தையாக பெருமைப்படுகிறேன்.

தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது, என் மகனுக்கு என் வாழ்த்துகள். 2 ஆண்டுகளில் அவரது நம்பிக்கையும், துணிச்சலும் வியப்பூட்டுகிறது. இது விஜய்க்கான வரலாற்று சாதனை, வரலாற்று வெற்றி!” என்றார்.

You May Also Like

More From Author