
பொதுவாக நம் நாட்டில் நாளுக்கு நாள் சுகர் பேஷண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது .இதற்கு முக்கிய காரணம் ஸ்ட்ரெஸ் .இயற்கை வழியில் சுகர் வராமல் எப்படி தற்காத்து கொள்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது உடல் எடையில் தான், எடை அதிகம் இருந்தாலே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவிகிதம் உண்டு..
2.எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்யாமல் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதும் நன்மையை தரும்.
3.ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒருமுறை மூன்று நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து விடுமாம்
4.சுகர் வராமலிருக்க நடந்து கொண்டே தொலைபேசியில் பேசுவது,
5.சுகர் வராமலிருக்க ஒரே இடத்தில் பல மணிநேரங்களாக அமர்ந்திருக்காமல் நடந்து கொண்டே இருப்பது,
6.சுகர் வராமலிருக்க மனதிற்கினிய பாடல்களுக்கு சிறிய நடன அசைவுகள் என சின்னச்சின்ன செயல்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
7.சுகர் வராமலிருக்க உங்கள் உணவை வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என அனைத்தும் கலந்து கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள்,
8.சுகர் வராமலிருக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகள் தேவை .இது செரிமானத்தை மேம்படுத்தும், உணவில் உள்ள சத்துக்களை நம் உடல் கிரகித்துக் கொள்ள இவை அவசியம்.
9.இதுமட்டுமின்றி சர்க்கரையின் அளவை குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியமாகிறது.
