பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.
அமைதி மற்றும் உரையாடல் முன்னேற்றத்திற்கு உகந்த சூழலை உருவாக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் நம்புவதாக FO செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் கூறியுள்ளார்.
எனினும், நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று எழுந்த சர்ச்சை குறித்து பேசிய அவர், புதிய நிர்வாகம் இன்னும் பதவியேற்காததால் “முன்கூட்டியே” எதுவும் சொல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

You May Also Like

More From Author