வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஃபுடான் பல்கலைக்கழகத்தின் பேரசிரியாருமான மைக்கேல் லெவிட் சமீபத்தில் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். புத்தாக்கத்தின் உந்து சக்தியாக இளைஞர்கள் விளங்குகின்றனர். இளம் அறிவியலாளர்களுக்கு சுதந்திரமான ஆராய்ச்சி சூழலை உருவாக்க வேண்டும். ஏற்க வேண்டிய பொறுப்புகளை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், தலைசிறந்த அறிவியலாளர்களும் அடிக்கடி தோல்வியடைகின்றனர்.
ஆகவே, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், இளம் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
