ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் 12ஆம் நாள், தன்னுடைய செய்தித்தொடர்பாளரின் மூலம், இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து வேதனை தெரிவித்தார்.
இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர்கள், இந்திய அரசு மற்றும் மக்கள், இவ்விபத்தினால் பாதிக்கப்பட்ட வேறு நாடுகளைச் சேர்ந்தோர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர் வெகுவிரைவில் குணமடையலாம் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.