இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 91 பைசாவும் சனிக்கிழமை (மே 23) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களில் மட்டும் எரிபொருள் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். உலகளவில் நீடித்து வரும் மேற்காசிய போர்ச் சூழல் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் முதன்மைக் காரணமாகும்.
10 நாட்களில் 3ஆவது முறை உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை; முழு விபரம்
