உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் கண்காணிப்பு மற்றும் மேலதிக மதிப்பீட்டிற்காக அரசு நடத்தும் தொற்று நோய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் வழியாக வந்த அப்பெண், செவ்வாயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான உடல் வலி இருப்பதாகவும், ஆனால் கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், தற்போது அவரது நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் நுழைந்ததா எபோலா? 28 வயது பெண் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
