சீனாவில் மே 24 முதல் 28ஆம் நாள் வரை அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கின்ற செர்பிய அரசுத் தலைவர் வுசிச், 26ஆம் நாள் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்புப் பேட்டியளித்தார். தைவான் பிரச்சினையில் செர்பியாவின் நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், குறிப்பிட்ட சிலர் பிரச்சினைகளையும் சர்ச்சையையும் உருவாக்க முயன்று வருகின்றநர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது கருத்து முன்பைப் போலவே உள்ளது. தைவான் பிரச்சினை சீனாவின் உள்விவகாரமாகும். ஐ.நா. சாசனத்தின்படி, தைவான் சீனாவுக்குச் சொந்தமானது என்று தெரிவித்தார்.
