இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஸ்பாட் சந்தையில் டாலர்களைப் பெருமளவில் விற்பனை செய்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த மே 22 நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு ஒரே வாரத்தில் 7.51 பில்லியன் டாலர் சரிவடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியின் காரணமாக, இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பின் மதிப்பு 681.38 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்! ஒரே வாரத்தில் சரிந்த அந்நியச் செலாவணி இருப்பு – ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு!
