அமெரிக்காவில் சட்டவிரோதமாக வர்த்தக லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றியதற்காக கைது செய்யப்பட்ட 52 பேரில், சுமார் 30 பேர் இந்திய நாட்டவர் ஆவர்.
அரிசோனாவின் யூமா செக்டாரில், மே 11 முதல் மே 15 வரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட “ஆபரேஷன் செக்மேட்” என்ற கூட்டாட்சி குடிவரவு அமலாக்க நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
குடிவரவு சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமும், வர்த்தக வாகனங்களை இயக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை அடையாளம் காண்பதன் மூலமும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஒட்டி கைது செய்யப்பட்ட 52 பேரில் 30பேர் இந்தியர்கள்
