தென் கொரியாவின் பங்குச் சந்தை, இந்தியாவின் பங்குச் சந்தையை முந்தி உலகின் ஆறாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் சிப் ஜாம்பவான்களான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எஸ்.கே. ஹைனிக்ஸ் ஆகியவற்றின் சிறப்பான செயல்பாட்டின் பின்னணியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, கொரியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் இந்த ஆண்டு 86% அதிகரித்து 5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் சந்தை மூலதனம் 4.8 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
தென் கொரியா, இந்தியாவை முந்தி 6வது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது
