சில ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியர்களுக்கு ஓர் அறிவுரையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்த பாதிப்பும் பதிவாகவில்லை என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் செய்தவர்கள் அல்லது அந்நாடுகள் வழியாகப் பயணித்தவர்கள், அறிகுறிகளை உணர்ந்தால், தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளூர் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (D.R.C) 300-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
எபோலா குறித்த ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது
