“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் கட்சியில் இருந்து விலகல் 

Estimated read time 1 min read

தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர், தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறியுள்ள முதலமைச்சர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இன்று தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற இந்த முக்கிய அரசியல் இணைவு விழாவில், தவெக அரசின் முக்கிய அமைச்சரான என். ஆனந்த் முன்னிலையில் விஜயலட்சுமி அரவிந்த் தவெக-வில் இணைந்தார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து மற்ற கட்சிகளில் இருந்து முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து தவெக-வை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், பாஜகவின் மாநில அளவிலான பொறுப்பில் இருந்த ஒரு பெண் நிர்வாகி தற்போது தவெக-வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலையும், தவெக அமைப்பிற்குள் ஒரு புதிய அரசியல் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தைக் சூடாக்கியுள்ளது.

You May Also Like

More From Author