இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹12,500 கோடிக்கும் அதிகம்) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வரி எளிமைப்படுத்தல், வர்த்தக ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் வணிக சூழலை மேம்படுத்துதல் போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று உலக வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
₹12,500 கோடி நிதி!! இந்தியாவின் மெகா திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்
