தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பை ஃபிலிப்பைன்ஸ் ஒரு சார்பாக முன்வைத்த 10ஆவது ஆண்டு இவ்வாண்டு ஆகும். கடந்த 10ஆண்டுகளில், இத்தீர்ப்பின் சட்டவிரோதமானதும் அபத்தமானதும் சீன-ஃபிலிப்பைன்ஸ் உறவு மற்றும் பிரதேசத்தின் நிலைக்குக் கொண்டு வந்த பாதிப்புகள் தெளிவாகக் காணப்பட்டுள்ளன. அவற்றைப் பன்முகங்களிலும் நீக்குவது மிக அவசியமானது.
தென் சீனக் கடல் பற்றிய பாதுகாப்பு வட்ட மேசை உரையாடல் 13ஆம் நாள் காலை சீனாவின் ஹாங்காங்கில் துவங்கியது. இவ்வுரையாடலின் போது, தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்புக்கான புதிய எதிர்ப்பு என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச சட்டத்தை மீறிய தீமைக்கு எடுத்துக்காட்டு ஆகும் என்று உரையாடலில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.
