ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Estimated read time 0 min read

மத்திய அரசு அனுமதி அளித்ததும் விண்ணில் பாய இரண்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயாராக உள்ளன.

இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான ‘நேவிக்’ செயற்கைக்கோள் 10 ஆண்டு செயல்பாட்டுக்குப்பின் தற்போது காலாவதியாகி உள்ளது. இதனுடன் இணைந்து செயல்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் – 1பி, ஐஆர்என்எஸ்எஸ் – 2, என்விஎஸ் – 01 ஆகிய செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

நான்கு செயற்கைக் கோள்கள் இணைந்தால்தான் இருப்பிடங்களை துல்லியமாக அறிய முடியும் என்ற நிலையில் என்விஎஸ் – 03 மற்றும் ஜிசாட் – 1ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்த தயாராக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய விண்வெளித் துறையின் அனுமதி கிடைத்ததும் எரிபொருள் நிரப்பப்பட்டு அவை ஏவப்படும் தேதி அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author