மத்திய அரசு அனுமதி அளித்ததும் விண்ணில் பாய இரண்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயாராக உள்ளன.
இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான ‘நேவிக்’ செயற்கைக்கோள் 10 ஆண்டு செயல்பாட்டுக்குப்பின் தற்போது காலாவதியாகி உள்ளது. இதனுடன் இணைந்து செயல்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் – 1பி, ஐஆர்என்எஸ்எஸ் – 2, என்விஎஸ் – 01 ஆகிய செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
நான்கு செயற்கைக் கோள்கள் இணைந்தால்தான் இருப்பிடங்களை துல்லியமாக அறிய முடியும் என்ற நிலையில் என்விஎஸ் – 03 மற்றும் ஜிசாட் – 1ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்த தயாராக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய விண்வெளித் துறையின் அனுமதி கிடைத்ததும் எரிபொருள் நிரப்பப்பட்டு அவை ஏவப்படும் தேதி அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.
