சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆறும் கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில், நேற்று இரவு முதல் மீன்கள் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கி வருகின்றன. பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால், ஆற்றை நம்பியே வாழும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடுநீர் காரணமா? அல்லது பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறும் கழிவு நீர் காரணமா? என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி, 8 கிராம மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!
