வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திரும்ப ஒப்படைக்கக் கோரும் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடுகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்க முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஈகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், எந்தவொரு ராஜதந்திர உறவும் இரு நாடுகளின் பரஸ்பர நலன்களையும் மதிப்பதாக அமைந்தால் மட்டுமே அது வெற்றிகரமாக இயங்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.
வங்கதேச உறவு இருதரப்பு நலனை சார்ந்திருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடி
