உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கடல் கண்ணிவெடிகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேசக் கடல் எல்லையில் அமைந்திருக்கும் இந்த முக்கியப் பாதையை அமெரிக்கக் கடற்படை தற்போது தனது முழுப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தகவலைத் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், வர்த்தகக் கப்பல்கள் இனி எவ்வித அச்சமுமின்றி இந்தப் பகுதியைப் பயன்படுத்தலாம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீட்டதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி
