தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கான இட இறுதி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் 25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குப் பட்டினப்பாக்கம் (போர்ஷோர் எஸ்டேட்) பகுதியில் உள்ள நிலத்திற்குத் தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளன.
வருவாய்த் துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களையும் சேர்த்து மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: தவெக அரசின் ரூ.2,047 கோடி பிரம்மாண்ட திட்டம்
