சென்னை மாநகரத்தின் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு உகந்த இடங்களைத் தவெக அரசு தற்போது தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, இந்த இரண்டு தளங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளை உடனே நடத்துமாறு கேட்டுக்கொண்டு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு பிரத்யேகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் செய்யூர் தளம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், செய்யூர் பகுதிக்குத் தாம்பரம் விமானப் படை தளத்தின் வான்வெளி அனுமதி தேவைப்படும் சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கும்மிடிப்பூண்டி பகுதிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் பாதுகாப்பு அமைவிடக் கட்டுப்பாடுகளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சென்னையின் 2வது விமான நிலையம்: செய்யூர், கும்மிடிப்பூண்டியை தவெக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல்
