தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை: முதல்வர் விஜய் பதிலுரைக்கு பலத்த எதிர்பார்ப்பு  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடும் நிலையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார்.
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது தீவிர விவாதம் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் விரிவான விளக்கமளித்து முக்கியமான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author