விமர்சித்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்த நடிகை….

Estimated read time 0 min read

கடந்த மே மாதம் நடைபெற்ற வைர நகை கண்காட்சி ஒன்றில், தான் அணிந்து சென்ற ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார். பொதுவெளியில் பெண்களின் ஆடைகள் மட்டுமே தொடர்ந்து விமர்சிக்கப்படுவதைக் சுட்டிக்காட்டி அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “பெண்களைப் பற்றித் தவறான கருத்துகளைச் சொல்பவர்களை இங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், அதே சமயம் ஒரு பெண் என்ன உடை அணிகிறார் என்பதை மட்டும் மிக உன்னிப்பாகக் கவனித்து விமர்சனம் செய்கிறார்கள்” என்று சாடினார். சமூகத்தில் நிலவும் இந்த இரட்டை நிலைப்பாட்டை அவர் கடுமையாகச் சாடினார்.

மேலும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய அவர், “நமது நாட்டின் ஜிடிபி வளர்ச்சியைப் பற்றியோ அல்லது முதியோர் இல்லங்களில் பெற்றோர் கைவிடப்படும் வேதனையான சூழலைப் பற்றியோ நாம் ஏன் விவாதிப்பதில்லை? அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணின் உடை மட்டுமே இங்குப் பெரிய விவாதப் பொருளாக மாறுவது ஏன்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

சமூக வலைதளங்களில் தேவையில்லாத ஆடை சர்ச்சைகளை உருவாக்குபவர்களுக்குத் தனது அதிரடி கேள்விகள் மூலம் சாட்டையடி கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் இந்தத் தைரியமான பேச்சு, தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ஆதரவையும் காரசாரமான விவாதங்களையும் பெற்று வருகிறது.

You May Also Like

More From Author