திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில் திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில், பிரம்மோற்சவத்தில் ஏழுமலையானுக்கு பயன்படுத்துவதற்காக 9 திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, திருக்குடைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாஸ்கர் பெற்றுக்கொண்டார். மேலும், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என பக்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
