சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: இந்தியா
அமெரிக்கா மீது பதிலுக்கு 50% வரி விதிக்க வேண்டும்: சசி தரூர் கோருகிறார்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய அரசாங்கம் அமெரிக்கப் பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், [மேலும்…]
ஜூலை 2025 இல் இந்தியாவின் ஆட்டோமொபைல் 4.31% வீழ்ச்சி
ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) ஜூலை 2025க்கான அதன் வாகன சில்லறை விற்பனைத் தரவை வெளியிட்டது. இது இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த வாகன [மேலும்…]
கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்டது. இந்த [மேலும்…]
இன்னும் முடியல…இந்தியா மீது 50% வரி விதித்த பிறகு டிரம்ப் எச்சரிக்கை
இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25சதவீத வரி விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் தொடர்ந்து [மேலும்…]
அக்டோபர் 1க்குள் முழு சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்குகிறது ஏர் இந்தியா
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விமானம் AI171 இன் துயர விபத்தை அடுத்தது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 2025 முதல் அதன் [மேலும்…]
ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கையை “நியாயமற்றது மற்றும் காரணமற்றது” என்று இந்தியா [மேலும்…]
உத்தரகாசியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் காணாமல் போனதாக தகவல்
தாராலி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பத்து வீரர்களும் ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரியும் (ஜே.சி.ஓ) காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவத்தில் [மேலும்…]
இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தவர் என்று சாதனை படைத்துள்ள அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை [மேலும்…]
டிரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாஸ்கோவிற்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு பயணமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மாஸ்கோவிற்கு சென்றுள்ளார். [மேலும்…]
