காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றமா?….. சென்னை மாநகராட்சி விளக்கம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் செயல்படுத்தப்பட்ட வரும் இந்த திட்டத்தை தனியாருக்கு தர டெண்டர் கோரப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அப்படி எந்த ஒரு திட்டமும் மாநகராட்சி இடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

More From Author