225 பயணிகளுடன் திடீரென ரஷ்யாவிற்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்  

நேற்று டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது.

விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

விமானிகள் (காக்பிட் குழுவினர்) சரக்குகள் வைத்திருக்கும் பகுதியில் சாத்தியமான சிக்கலைக் கண்டறிந்ததை அடுத்து, AI183 விமானம் ரஷ்யாவின் கிராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்தில் உள்ள க்ராஸ்நோயார்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியதாக விமான நிறுவனம் கூறியது.

விமானத்தில் 225 பயணிகளும், 19 விமான ஊழியர்களும் இருந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author