சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்  

Estimated read time 1 min read

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பரங்கிமலையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவை வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author