கோவில்பட்டியில்முழு சந்திர கிரகணசெயல் விளக்கப்பயிற்சி

Estimated read time 1 min read

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முழு சந்திர கிரகண செயல் விளக்க பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் வருகிற 7ம் தேதி இரவு நடைபெற உள்ள முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
இதில் செப் – 7ம் தேதி இரவில் வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிகழ்வு முழு சந்திர கிரகண நிகழ்வாகும். இந்நிகழ்வினை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
பள்ளி பொருளாளர் வள்ளுவன்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரமேஷ், முனைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு முழு சந்திர கிரகண நிகழ்வினை செயல் விளக்கத்துடனும்,தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இதில் மாணவர்களுக்கு முழு சந்திர கிரகண விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author