சீனா-லாவோஸ் ரயில்பாதையில் ஒரு கோடி டன் அளவில் சரக்கு வர்த்தகம்

2021ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட சீனா-லாவோஸ் இருப்புப் பாதை மூலம் செப்டம்பர் 16ஆம் நாள் வரை ஒரு கோடியே 2ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன என்று சீனாவின் குன்மிங் சுங்கத் துறை செவ்வாய்கிழமை வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


சீனாவில் இருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், லாவோஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து இயற்கை ரப்பர், பழங்கள் ஆகியவை அதன் வழியாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. தற்போது வரை, இதன் வர்த்தக தொகை 4077 கோடி யுவானை எட்டியுள்ளது.

You May Also Like

More From Author